Sunday, February 13, 2011

இசையாய் தமிழாய் இருப்பவனே..

இசையாய் தமிழாய் இருப்பவனே..
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..

இகபரசுகமருள் பரமகருணை வடிவே..
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..
இகபரசுகமருள் பரமகருணை வடிவே..
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீறும்
பூந்தளிர் மலர் மாலையும்..
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீறும்
பூந்தளிர் மலர் மாலையும்..
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
வாய்ந்த செஞ்சடைக் கோலமும்..

வானவர்..
ஞானியர்..
வாழ்த்திடும்..
வடிவினையுடையாய்..
அருட்பெரும் சுடராய்..
அடியவர் மனதினிலே..

இசையாய் தமிழாய் இருப்பவனே..
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..
இகபரசுகமருள் பரமகருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

நந்திதேவனொடு இந்திராதியர்
வந்து தாழ்நினைவணங்கிடவே..
நந்திதேவனொடு இந்திராதியர்
வந்து தாழ்நினைவணங்கிடவே..

தந்திமாமுகனும் விந்தைவேல்முகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே..
தந்திமாமுகனும் விந்தைவேல்முகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே..

எந்தவேளையும் மறதிடாது
மறைசிந்து நான்முகன் பணிந்திடவே..
சந்தமார்குழலி இந்துநேர்வதனி
மங்களாம்பிகை மகிழ்ந்திடவே..

தவினுறு முகமதில் இளநகையே
கனிவுறு விழிகளில் அருள் மழையே..
சுவைபட வருவதும் எழுசுரமே
துணையென மொழிவதும் உயர்தமிழே..

மந்திரமாய்..
மாதவமாய்..
தந்திரமாய்..
தாரகமாய்..
வழிபடும் அடியவர் இருவினை பொடிபட
மழுமதி தனைவிடும் இனிய அபயகரமும்
வாய்ந்த செஞ்சடைக் கோலமும்..

வானவர்..
ஞானியர்..
வாழ்த்திடும்..
வடிவினையுடையாய்..
அருட்பெரும் சுடராய்..
அடியவர் மனதினிலே...

இசையாய் தமிழாய் இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே
இகபரசுகமருள் பரமகருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

No comments: