Friday, February 25, 2011

ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்




ஓம் நமச்சிவாயா

ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
சிறிதும் களங்கம் இல்லா சிவ லிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எரித்த கருணா லிங்கம்
ராவண உள்ளம் விலங்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிலை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
முந்திய வினைகளை போக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவர் கணங்களின் அர்ச்சன லிங்கம்
தேடிடும் பக்தியின் ஊறிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர்விடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

எட்டு தளத்தினில் எழுந்திடும் லிங்கம்
எல்லாம் ஆகிய காரண லிங்கம்
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரின் உருவின் பூஜைக்கோள் லிங்கம்
தேவ வணமலரை ஏற்றிடும் லிங்கம்
பரம நாதனாய் பரவிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டக இதை தினமும்
சிவ சந்நிதியில் சொல்வார்
சிவலோக காட்சியுடன்
சிவன் அருளும் கொள்வார்கள்





ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டகம் இதம் புண்யம் யே படேத் சிவ சன்னிதௌ
சிவலோகம் அவாப்நோதி சிவே ந ஸஹமோததே

Sunday, February 13, 2011

இசையாய் தமிழாய் இருப்பவனே..

இசையாய் தமிழாய் இருப்பவனே..
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..

இகபரசுகமருள் பரமகருணை வடிவே..
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..
இகபரசுகமருள் பரமகருணை வடிவே..
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீறும்
பூந்தளிர் மலர் மாலையும்..
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
பொன்னெழில் மேனியில் பூசிய வெண்ணீறும்
பூந்தளிர் மலர் மாலையும்..
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
வாய்ந்த செஞ்சடைக் கோலமும்..

வானவர்..
ஞானியர்..
வாழ்த்திடும்..
வடிவினையுடையாய்..
அருட்பெரும் சுடராய்..
அடியவர் மனதினிலே..

இசையாய் தமிழாய் இருப்பவனே..
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே..
இகபரசுகமருள் பரமகருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

நந்திதேவனொடு இந்திராதியர்
வந்து தாழ்நினைவணங்கிடவே..
நந்திதேவனொடு இந்திராதியர்
வந்து தாழ்நினைவணங்கிடவே..

தந்திமாமுகனும் விந்தைவேல்முகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே..
தந்திமாமுகனும் விந்தைவேல்முகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே..

எந்தவேளையும் மறதிடாது
மறைசிந்து நான்முகன் பணிந்திடவே..
சந்தமார்குழலி இந்துநேர்வதனி
மங்களாம்பிகை மகிழ்ந்திடவே..

தவினுறு முகமதில் இளநகையே
கனிவுறு விழிகளில் அருள் மழையே..
சுவைபட வருவதும் எழுசுரமே
துணையென மொழிவதும் உயர்தமிழே..

மந்திரமாய்..
மாதவமாய்..
தந்திரமாய்..
தாரகமாய்..
வழிபடும் அடியவர் இருவினை பொடிபட
மழுமதி தனைவிடும் இனிய அபயகரமும்
வாய்ந்த செஞ்சடைக் கோலமும்..

வானவர்..
ஞானியர்..
வாழ்த்திடும்..
வடிவினையுடையாய்..
அருட்பெரும் சுடராய்..
அடியவர் மனதினிலே...

இசையாய் தமிழாய் இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே
இகபரசுகமருள் பரமகருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..

Tuesday, February 8, 2011

நாத்திகம் வாழ்க!

ஆத்திகரைக் காட்டிலும் - நான்
நாத்திகரை போற்றுகின்றேன்!
விடையைத் தேடுபவர்,
விடையை அறிந்தவர்
எவர் பெரியோர் இவ்விடத்தில்?
இறையைத் தேடி இருப்பவர் ஆத்திகர்!
அதனைத் தேடி முடித்தவர் நாத்திகர்!
கடவுள் இல்லை என்பதை
நாத்திகம் சுருங்கச் சொல்கிறது!
அதையேதான் ஆத்திகமும் சொல்கிறது!
கடவுள் இல்லை - இது நாத்திகம்!
கடவுள் என்பது எதிலும் இல்லை - இது ஆத்திகம்!
கடவுள் என்பவர் எவரும் இல்லை!
கடவுள் என்பது எதுவும் இல்லை!
ஆதியும் இல்லை! அந்தமும் இல்லை!
உருவமும் இல்லை, அருவமும் இல்லை!
அகமும் இல்லை, புறமும் இல்லை!
மெய்யும் இல்லை, பொய்யும் இல்லை!
ஒளியும் இல்லை, இருளும் இல்லை!
அளவிடத் தகுந்த அளவும் இல்லை!
உணர்ந்திடத் தகுந்த உணர்வும் இல்லை!
விளங்கிடத் தகுந்த விளக்கமும் இல்லை!
இல்லை இல்லை இல்லை இல்லை!
இப்படி இத்தனை இல்லைகள் எனவும்
அத்தனை இல்லைகள் அனைத்திலும் அவனே!
இல்லைகள் என்பது இருக்கும் வரையே
இருக்கும் என்பதன் மதிப்பும் உயரும்!
நாத்திகம் இன்றி ஆத்திகம் இல்லை!
ஆத்திகம் இன்றி நாத்திகம் இல்லை!
நாத்திகம் வாழ்க! நாத்திகம் வாழ்க!
நயம்பட நானும் வாழ்த்துவேன் பாரீர்!
பக்கத்து இலைக்கும் பாயசம் தாரீர்!

Sunday, January 16, 2011

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா



என்று ஆனை முகனை வணங்கி



என்று முருகன், மால் மருகனைத் தொழத் தொடங்கி

இன்று வரையிலும் 199 பாடல்களைப் பதிவு செய்திருக்கிற

முருகனருள் வலைப்பூவில் வருகிற தைப்பூசத் திருநாளன்று

200 வது பதிவிட உள்ளோம்.



இதனைத் தொடர்ந்து ஆர்வமுடனும் பக்தியுடனும் சிறப்புற தொடரச் செய்த முருகனருள் குழும உறுப்பினர்கள் அனைவருக்கும், வாசித்த, வாசிக்கப்போகும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி நவில்வதோடல்லாமல் எல்லாம் வல்ல முருகனருள் நிறைவாய்க் கிடைத்திட எம்பெருமான் முருகனை வணங்கி வேண்டுகிறேன்!

----------------------------------------------------------------------------------------------------


பாடல்: சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்



சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே

உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையிலே நின்திருப் புகழினை நான் பாட
இணையிலே நின்திருப் புகழினை நான் பாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அரகர சிவசுத மால்மருகா என
அனுதினம் ஒருதரமாகிலும் - உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

சுடர்மிகு வடிவேலா !

Friday, November 26, 2010

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அருளிய கோளறு பதிகம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அருளிய கோளறு பதிகம்.

"வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியார‌ வர்க்கு மிகவே."

"என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு ப‌தினெட்டொ டாறும்
உடனாய நாள்க ள‌வைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார‌வர்க்கு மிகவே. "

"உருவளர் பவளமேனி ஒளிநீ ற‌ணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருக‌லர் கொன்றைதிங்கள் முடிமேல‌ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய‌தூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே. "

"மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"நஞ்ச‌ணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதம‌வையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோள‌ரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆள‌ரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையான‌ பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வத‌னால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற‌னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"கொத்தல‌ர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ ட‌மணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே."


கிரகங்களின் பாதிப்புகளில் இருந்து ஒருவரை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கோளறு பதிகத்தினை பாராயணம் செய்து வந்தால் போதுமானது என்கிறார் குரு சங்கராச்ச்சாரியார்...




Saturday, November 6, 2010

சுட்டதொரு சட்டி!

சுட்டதொரு சட்டியென
விட்டிருகை தொழுதிருக்க
கற்ற மொழியுற்ற பணி
சுற்றமென அத்தனையும்
விட்டொழித்து பற்றறுக்கும்
பக்குவத்தைத் தரவேண்டும்
தொட்ட துணையுற்ற பொருள்
மற்றதெது அத்தனையும்
நட்டமில்லை விட்டிடினும்
பற்றிடவே உந்தன் திருவடி வேணும்

சுற்றும் விதி கெட்ட மதி
பற்றும் பிணி தொற்றுமொரு
ஆசையென விட்டகலா
வேதனையும் எதற்காக?

கண்ட விழி கேட்டசெவி
நுகர்ந்த நாசி சுவைத்த நாவும்
சுமந்த மெய்யடக்கிடவே
உன் துணை வேண்டும்!

விட்ட குறை தொட்ட குறை
என்றெதுவும் தேவையில்லை
விட்டு விடு இப்பிறவி இத்தோடு!
அதை எடுத்துவிடு உன்னுடனே முப்பொழுதும்
--------------------------------------------------------------------
நன்றி...........! .