Showing posts with label முருகனருள். Show all posts
Showing posts with label முருகனருள். Show all posts

Sunday, January 16, 2011

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா



என்று ஆனை முகனை வணங்கி



என்று முருகன், மால் மருகனைத் தொழத் தொடங்கி

இன்று வரையிலும் 199 பாடல்களைப் பதிவு செய்திருக்கிற

முருகனருள் வலைப்பூவில் வருகிற தைப்பூசத் திருநாளன்று

200 வது பதிவிட உள்ளோம்.



இதனைத் தொடர்ந்து ஆர்வமுடனும் பக்தியுடனும் சிறப்புற தொடரச் செய்த முருகனருள் குழும உறுப்பினர்கள் அனைவருக்கும், வாசித்த, வாசிக்கப்போகும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி நவில்வதோடல்லாமல் எல்லாம் வல்ல முருகனருள் நிறைவாய்க் கிடைத்திட எம்பெருமான் முருகனை வணங்கி வேண்டுகிறேன்!

----------------------------------------------------------------------------------------------------


பாடல்: சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்



சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே

உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையிலே நின்திருப் புகழினை நான் பாட
இணையிலே நின்திருப் புகழினை நான் பாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அரகர சிவசுத மால்மருகா என
அனுதினம் ஒருதரமாகிலும் - உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

சுடர்மிகு வடிவேலா !